போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்த மீரா மிதுன்

அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் போதை ஏறி புத்தி மாறி படத்தில் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #BodhaiYeriBudhiMaari #MeeraMitun
போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்த மீரா மிதுன்
Published on

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகும் படம் `போதை ஏறி புத்தி மாறி'. த்ரில்லர் படமாக உருவாகும் இதன்மூலம், பல்வேறு குறும்படங்களில் நடித்து பிரபலமான தீரஜ் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். பிரதைனி சர்வா என்ற மாடல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து மீரா மிதுன் கூறும்போது,

இந்த படம் தடம் மாதிரி ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும் த்ரில்லர் வகையை சேர்ந்தது. தலைப்புக்கு சம்பந்தத்தை கிளைமாக்ஸில் மட்டுமே பார்க்க முடியும். இயக்குநர் கே.ஆர்.சந்துரு குறும்பட இயக்குநர், கதை சொன்ன உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தோன்றியது.

இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பையும், கோபி ஆனந்த் கலை பணிகளையும் கவனிக்கின்றனர். #BodhaiYeriBudhiMaari #Dheeraj #KRChandru #MeeraMitun

X

Maalai Malar
www.maalaimalar.com