பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலம் சொல்லிய மன்சூரலிகான்

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலம் சொல்லியிருக்கிறார் மன்சூரலிகான்.
மன்சூரலிகான்
மன்சூரலிகான்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக மட்டும் இன்றி, ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் மன்சூரலிகான், அரசியலில் ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு சமூக பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

இன்று சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும், என்றால் என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்றதோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யூடியூப் தளத்தில் நடிகர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ளார்.

தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூரலிகான் நடித்திருக்கும் ‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரிப்பதோடு, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com