

இதில் ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் வெளிநாட்டு நடிகர் அந்தோணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை - என்.கண்ணன், ஒளிப்பதிவு - பாஹி, பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை, எடிட்டிங் - கே.வி. மணிகண்ட பாலாஜி, கலை - ஸ்ரீஜெய் கல்யாண், வசனம் - வீருசரண், ஸ்டண்ட் - ராஜசேகர், நடனம் - ராதிகா, சங்கர், இயக்கம் - சிவசக்தி.
“ இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.
நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.