பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா

தமிழில் பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தற்போது பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.
கிருஷ்ணா
கிருஷ்ணா
Published on

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் சத்யசிவா இணைந்து கழுகு, கழுகு 2 என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு ‘பெல் பாட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பெல்பாட்டம்’ முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடக்கும் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீசாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய், தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.

கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு பல எதிர்ப்பாராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. 

இப்படத்தில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். என்.எச். ஹரி சில்வர் ஸ்கிரின்ஸ் நிறுவனம் சார்பில் எச்.சார்லஸ் இம்மானுவேல் இப்படத்தை தயாரிக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com