சமூக வலைதளங்களில் வெளியான நடிகை ஸ்ருதியின் ஆபாச படங்கள்: போலீசில் புகார்

நடிகை ஸ்ருதியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியான நடிகை ஸ்ருதியின் ஆபாச படங்கள்: போலீசில் புகார்
Published on

இந்த நிலையில், நடிகை ஸ்ருதியின் புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து சில மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள். இதுபற்றி அறிந்த நடிகை ஸ்ருதி அதிர்ச்சியும், ஆதங்கமும் அடைந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகை ஸ்ருதி வந்தார்.

பின்னர் அவர், போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை சந்தித்து தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் வெளியிட்டு இருப்பதாகவும், அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். அந்த புகாரை போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் பெற்றுக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com