பிராமணர்கள் அல்லா அர்ச்சகர்கள் நியமனம்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து

திருவாங்கூர் தேவஸ்தான அர்ச்சகர்கள் நியமனம் குறித்து கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிராமணர்கள் அல்லா அர்ச்சகர்கள் நியமனம்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
Published on

முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

`திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.'

இவ்வாறு கூறியிருக்கிறார்.

திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்மானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். மேலும் பெரியாரின் கனவை உணர முடிகிறது என்றும் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் சமீபத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சமீபத்தில் கேரளாவில் சந்தித்தார். அப்பாேது தனது அரசியல் பிரவேசம் குறித்து பினராயி விஜயனிடம் அறிவுரைகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com