பூஜையுடன் ‘கொரில்லா’ படப்பிடிப்பை துவங்கிய ஜீவா

ஜீவா நடிப்பில் கீ, கலகலப்பு-2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், ஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இன்று துவங்கியிருக்கிறது. #Jiiva #Gorilla
பூஜையுடன் ‘கொரில்லா’ படப்பிடிப்பை துவங்கிய ஜீவா
Published on

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் `காங்' சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பாண்டிசேரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Jiiva #Gorilla

X

Maalai Malar
www.maalaimalar.com