தலைவிக்கு தடைகோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தலைவி பட போஸ்டர், ஜெ.தீபா
தலைவி பட போஸ்டர், ஜெ.தீபா
Published on

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இதனிடையே, தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், குயின் இணையதள தொடரையும் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், கவுதம் மேனன் தனது இணையதள தொடரில் தீபா குறித்து எந்த கதாபாத்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குயின் தொடருக்கு தடை விதிக்க முடியாது. தலைவி படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனை கதாபாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com