இவன் ஏடாகூடமானவன்

ஜெஸ்டின் திவாகர் இயக்கத்தில் தட்டிக் கேட்கும் கதையான ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் முன்னோட்டம்.
இவன் ஏடாகூடமானவன்
Published on

இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா வில்லனாக நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஆதி.கருப்பையா, இசை - வித்யா‌ஷரன், பாடல்கள் - முத்து விஜயன், எடிட்டிங் - யோக பாஸ்கர், நடனம் - ஜாய்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.சைலேஷ் சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெஸ்டின் திவாகர் படம் பற்றி கூறிய அவர்....

“அரசியல் பின்புலமுள்ள அதிகார வர்க்கத்தினர் சமூகத்தில் கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக் களை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன் வசப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து எவ்வாறு அதை மீட்கிறான் என்பதே கதைகளம். காதல், நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com