ஜருகண்டி படத்தின் முக்கிய அறிவிப்பு

பலூன் படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் படக்குழுவினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். #Jarugandi
ஜருகண்டி படத்தின் முக்கிய அறிவிப்பு
Published on

'பலூன்' படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'ஜருகண்டி'. இப்படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கியுள்ளார். நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இப்படத்தின் டிரைலரை ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில் உருவாகியுள்ளது 'ஜருகண்டி'.

X

Maalai Malar
www.maalaimalar.com