மாரி 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடித்து வரும் மாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். #Dhanush #Maari2
மாரி 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
Published on

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருடன் சண்டைப்போடும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் தனுஷுக்கு கை, மற்றும் கால்களில் அடிப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நலமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது. விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com