என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா

என்னை மாமா என்று சமந்தா அழைப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாக நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
Published on

“நாகசைதன்யா நடித்துள்ள இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இதில் ஜகபதிபாபு அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார். நான் இன்னும் கதாநாயகனாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்கவில்லை. சினிமாவை நான் கடவுள் போல நேசிக்கிறேன். உழைத்தால் பயன் கிடைக்கும் என்பதை ‘பாகுபலி-2’ நிரூபித்து இருக்கிறது. இது ரூ.1500 கோடி வசூலை கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனை. அடுத்து இதுபோன்ற படம் எப்போது வரும் என்று தெரியாது.

எனது மகன் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இதற்கு சமந்தாவை மணக்க இருப்பது காரணமாக இருக்கலாம். சமந்தாவை எங்கள் குடும்பத்தின் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சமந்தா முன்பு என்னை ‘சார்’ என்று அழைப்பார். இப்போது மாமா என்று அழைக்கும்படி கூறி இருக்கிறேன். தெலுங்கில் அழைத்தால் ‘மாமய்யா’ என்று சொல்ல வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com