நிஜ சண்டையை பார்த்து பயந்து ஓடிய ஜி.வி.பிரகாஷ்

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், படப்பிடிப்பு தளத்தில் நிஜ சண்டையை பார்த்து பயந்து ஓடி இருக்கிறார். #GVPrakash
நிஜ சண்டையை பார்த்து பயந்து ஓடிய ஜி.வி.பிரகாஷ்
Published on

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘ஜெயில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாசுடன் அபர்ணதி, நந்தன் ராம், பாண்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கண்ணகி நகரில் நடைபெற்றது. கண்ணகி நகரில் அடிக்கடி அடிதடி தகராறு நடக்குமாம். படப்பிடிப்பின் போது நிஜமாகவே அரிவாள், கம்போடு ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை தாக்க உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி ஆகியோர் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். 

நிஜ சண்டை சுமார் ஒரு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார் வசந்தபாலன். இப்படத்தை ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com