ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா - ரெஜினா - ஐஸ்வர்யா ராஜேஷ் - பிரணிதா - அதிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் விமர்சனம்.
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
Published on

இதையடுத்து அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டி விடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

போகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார்? அதர்வா தனது முன்னாள் காதலிகளான  ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அதர்வா வழக்கமான, தனது ஈர்ப்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். அனைத்து நடிகைகளுமே அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள். யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளிலும், சூரியுடனான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதர்வா முதன்முறையாக காமெடி கலந்த கதையை முயற்சி செய்திருக்கிறார்.

ரெஜினா தமிழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. பிரணிதாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதீதி - அதர்வாவுடனான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. சூரி காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, டி.சிவா உள்ளிட்டோரும் கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

அதர்வாவின் தந்தை ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால் தான் அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என்று பெயர் வைத்தார். ஆனால் அந்த பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் படி நாயகனின் காதல் இருக்கிறதோ என்று ரசிகர்கள் யோசித்தாலும், திரைக்கதையின் போக்கு ஏற்ப ஓடம் இளவரசு அவ்வாறு இயக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி முழுவதும் சிரிப்பு மழை பொழிகிறது.

டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இமான் ஆட்டம்போட வைத்திருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com