முன்னாள் தணிக்கை அதிகாரி தயாரித்த படத்துக்கு ‘கட்’ எதுவும் இல்லை

முன்னாள் தணிக்கை அதிகாரி பக்லஜ் நிகாலனி தயாரித்திருக்கும் படத்திற்கு, தணிக்கை குழுவினர் எந்த கட்டும் கொடுக்கவில்லை.
முன்னாள் தணிக்கை அதிகாரி தயாரித்த படத்துக்கு ‘கட்’ எதுவும் இல்லை
Published on

இந்த படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ‘ஜூலி-2’ தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த படத்தின் எந்த காட்சிக்கும் ‘கட்’ கொடுக்கவில்லை. வசனம் உள்பட எதையும் நீக்கச்சொல்லவில்லை.

தீபக் சிவதாஷினி இயக்கியுள்ள இந்த படத்தை சென்சார் போர்டு முன்னாள் தணிக்கை அதிகாரி பக்லஜ் நிகாலனி, விஜய் நாயர் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.

சாதாரண படங்களையே துருவித் துருவி பார்க்கும் சென்சார்போர்டு அதிகாரிகள் முழு கவர்ச்சியுள்ள இந்த படத்தின் எந்த காட்சியையும் கண்டு கொள்ளவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com