‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: நாளை சமரச பேச்சுவார்த்தை

‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டன. நாளை சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.
‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: நாளை சமரச பேச்சுவார்த்தை
Published on

இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 1-ந்தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உள்பட முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

40 சினிமா படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக ‘பெப்சி’ தரப்பில் கூறப்பட்டது. பெப்சி வேலை நிறுத்தம் தொடர்வதால் நேற்று 3-வது நாளாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதை கண்டித்து சென்னையில் நாளை (5-ந்தேதி) ‘பெப்சி’ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கேமராமேன்கள், ஸ்டண்ட் நடிகர்கள், லைட்மேன்கள், மேக்கப்மேன்கள், எடிட்டர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பு மேற்பார்வையாளர்கள், நடன இயக்குனர்கள் உள்பட 23 சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com