சசிகுமாருக்கு வில்லியாக மாறிய பிரபல நடிகை

சசிகுமார் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக மாரி 2, தடம் படத்தில் நடித்த வித்யா பிரதீப் நடிக்க இருக்கிறார்.
சசிகுமாருக்கு வில்லியாக மாறிய பிரபல நடிகை
Published on

சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர் இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்தார்.

இதனை அறிந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்துள்ளார். இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமாரும் வித்யா பிரதீப்பின் திறமையை கண்டு வியந்து போக, சசிகுமாருக்கு வில்லியாக இப்படத்தில் தோன்றவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com