

ஒளிப்பதிவு - சாய்சதிஷ், படத்தொகுப்பு - மகேந்திரன், கலை - பழனிவேல், பின்னணி இசை - நவுசாத், இயக்கம் - குமரேஷ்குமார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “இந்த படத்திற்கு ‘இங்கிலிஷ் படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இதில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். இவர் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அங்கு பேய் இல்லை என்று நிரூபித்தால் வீட்டை வாங்குவதாக ஒருவர் சொல்கிறார்.
எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க, அதில் ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது. அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளை. படம் முழுவதும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாகி இருக்கிறது.