படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.
படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி
Published on

அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இதன் இசை வெளியீட்டு விழாவில் அதர்வா முரளி, சூரி, ரெஜினா, இசையமைப்பாளர் டி.இமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது....

“இந்த படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும். தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா கிரியே‌ஷன் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார். அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என்றார்.

நாசர், “திரை உலகினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் பிரேம்ஜி, சத்யராஜ் , ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com