இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ் கபூர் அவர்களின் மகன் இன்று மரணமடைந்துள்ளார்.
ராஜ் கபூரின் மகன்
ராஜ் கபூரின் மகன்
Published on

தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். தொடர்ந்து தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர். 

ஷாருக் கபூர் சில மாதங்களுக்கு புட் பாய்சன் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு உடல்நலம் சரியானால் மெக்காவுக்கு வருவதாக குடும்பத்தினர் வேண்டி இருந்தனர். அதன்படி மெக்காவுக்கு சென்றனர். ஆனால் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக ஷாருக்குக்கு மீண்டும் உடல் நிலை மோசமாகி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 23.

X

Maalai Malar
www.maalaimalar.com