‘காலா’ படத்தில் நடிக்க ஆசை : தனுஷ்

காலா படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் கூறியுள்ளார்.
‘காலா’ படத்தில் நடிக்க ஆசை : தனுஷ்
Published on

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, “சவுந்தர்யா, தனுசுக்கு இது வெற்றிப்படமாக அமையும். 20 ஆண்டுகளுக்குப்பின் தமிழில் கஜோல் நடித்தது மகிழ்ச்சி” என்றார். இயக்குனர் சவுந்தர்யா, “தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி. இந்த படத்தை என்னை நம்பி ஒப்படைத்த, என் நண்பர், வழிகாட்டி தனுசுக்கு நன்றி. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

விழாவில் பேசிய தனுஷ், “விஜபி என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். தமிழில் மட்டுமல்ல. தெலுங்கிலும் அது பெரிய ஹிட். ‘கொடி’ படப்பிடிப்பில் பொள்ளாச்சியில் இருந்த போது திடீரென ‘விஐபி2’ கதைக்கான ஐடியா வந்தது. நானே கதை எழுதினேன்.

பாலிவுட் நடிகை கஜோல் ‘வசுந்தரா’ என்ற முக்கியமான வேடத்தில் நடிக்க ஓ.கே.சென்னது பெரிய பிளஸ். அது வில்லி வேடம் அல்ல. பெண்களை பற்றி படத்தில் உயர்வாக சொல்லியிருக்கிறோம். இன்னமும் 14 வயது பெண் மாதிரி உற்சாகமாக இருக்கிறார் கஜோல். சின்ன வயதில் பார்த்து வியந்த கஜோல் போன்ற நடிகையுடன் நடிப்பது சந்தோ‌ஷம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com