

இந்த நிலையில் சினிமா உலகத்துக்கு வந்தது பற்றி தனுஷ் அளித்த பேட்டியில், “எனக்கு முதலில் சினிமா பற்றி தெரியாது. எனவே இந்த துறைக்கு வரவிரும்பவில்லை. நானாக சினிமாவுக்கு வர விரும்பியதில்லை. குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் வந்தேன்.சில ஆண்டுகள் கழித்து இது தான் என் தொழில். சினிமா தான் எனக்கு என்று கடவுள் எழுதி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.