தாசரி நாராயணராவ் சாவில் மர்மம்: மருமகள் திடீர் புகார்

தாசரி நாராயணராவ் சாவில் மர்மம்: மருமகள் திடீர் புகார்

சொத்து பிரச்சினையால் சினிமா தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மருமகள் புகார் கூறியிருக்கிறார்.
Published on

இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். தாசரி நாராயணராவ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று முன்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கான அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திரைத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் தாசரி நாராயணராவ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மருமகள் சுசீலா புகார் கூறியுள்ளார்.

தாசரி நாராயணராவின் மூத்த மகன் ஹரிபிரபுவை சுசீலா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். ஆனாலும் இன்னும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. தாசரி நாராயணராவ் மரணம் குறித்து சுசீலா நிருபர்களிடம் கூறியாதாவது:-

“நான் தாசரி நாராயணராவை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். அப்போது அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். எனது மகன் நாராயணாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதியும் அளித்தார். இந்த நிலையில் திடீரென்று அவர் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

எனக்கும் தாசரி நாராயணராவ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. தாசரி நாராயணராவ் சொத்தில் எனக்கும் எனது மகனுக்கும் உரிய பங்கை தருவதாக உறுதி அளித்து இருந்தார். சிறிய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி இருப்பதாகவும் அது முடிந்ததும் சொத்தை பிரித்து தருகிறேன் என்றும் என்னிடம் கூறியிருந்தார். எனவே அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது”.

X

Maalai Malar
www.maalaimalar.com