மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” -டீசர் வெளியானது!

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏன் என்னை ஏதோ செய்தாய் பட டீசர் காட்சிகள்
ஏன் என்னை ஏதோ செய்தாய் பட டீசர் காட்சிகள்
Published on

உணர்வுகளும் இசையும் இணைந்த காதல் அனுபவத்தை வழங்கும் “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது.

படத்தின் மையக்கரு

ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மாற்றி, தனிமை மற்றும் இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே படத்தின் மையக்கரு.

வெளியாகியுள்ள டீசரில், தனிமை, வலி, மதுப்பழக்கம் ஆகியவற்றால் சிக்கித் தவிக்கும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றம் அழகான காட்சிகளின் மூலம் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. காதலின் மென்மையையும், வாழ்க்கையின் வலியையும் சமநிலையுடன் வெளிப்படுத்தும் டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

நடிகர்கள்

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, முழுப் படமும் லைவ் சவுண்டில் உருவாக்கப்பட்டிருப்பதுடன், அனைத்து பாடல்களும் நேரடி இசைக்கருவிகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது திரைப்படத்திற்கு இயல்பான ஒலியமைப்பையும் தனித்துவமான அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு

டி ஆண்டனி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், ஒளிப்பதிவை பியட்ரோ வில்லானி மேற்கொண்டுள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளார்கள். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி எழுதியுள்ளனர். ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத், சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

உணர்வுகளும் இசையும் இணைந்த காதல் அனுபவத்தை வழங்கும் “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com