என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொடூர பயங்கரவாதத் தாக்குதல் மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடி- அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
    X

    கொடூர பயங்கரவாதத் தாக்குதல் மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடி- அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

    • பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் 26 பேர் உயிரிழப்பு.
    • அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும்.

    ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.

    அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர்!

    தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×