ஆரஞ்சு உடையில் அசத்தல்- கரீனா கபூரை பாராட்டிய ரசிகர்கள்

கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.
ஆரஞ்சு உடையில் அசத்தல்- கரீனா கபூரை பாராட்டிய ரசிகர்கள்
Published on

இந்தி நடிகை கரீனா கபூர் திரைத்துறையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 39 வயதான அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

அவர் எதை செய்தாலும் சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்த காரியத்தை செய்யக்கூடியவர். சமீபத்தில் யூனிசெப்பின் புதிய முயற்சியான 'எவரி சைல்ட் ரீடிங்' திட்டத்தின் நல்லெண்ண தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் முதலில் ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சிகரமாக காட்சியளித்த அவரது தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டினர்.

குறைந்த மேக்கப்புடன் காணப்பட்ட கரீனா தனது தலைமுடியை தளர்வாக வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மஞ்சள் நிற பேண்ட்-சூட் உடையில் அவர் தோன்றினார். அவரது இந்த இரண்டு தோற்றங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்த படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com