கவர்ச்சி உடையில் யாஷிகா.. வைரலாக்கும் ரசிகர்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்
Published on

2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 

யாஷிகா ஆனந்த்

அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

யாஷிகா ஆனந்த்

சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். இந்நிலையில் யாஷிகா பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பலர் விமர்சித்தும் பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com