சூர்யா -42 படத்தின் பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமவுலி தான் - ஞானவேல் ராஜா

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.
ராஜமவுலி -ஞானவேல் ராஜா
ராஜமவுலி -ஞானவேல் ராஜா
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சூர்யா -42 படத்தின் பட்ஜெட்டிற்கு இயக்குனர் ராஜமவுலி தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இந்த படத்தின் பட்ஜெட் இதுவரை சூர்யா நடித்துள்ள படங்களின் பட்ஜெட்களிலிருந்து மூன்று மடங்கு பெரியது. இது சூர்யாவிற்கே தெரியாது. இன்று ஒரு கே.ஜி.எப் அல்லது சூர்யா 42 போன்ற படங்கள் மும்பையை ரூல் பண்ணுகிறது என்றால் அதற்கு காரணம் ராஜமவுலி தான்.

சூர்யா 42

ஏனென்றால் அவர் பாகுபலி என்ற திரைப்படம் எடுக்கவில்லை என்றால் இன்று நமக்கு மும்பையில் வேலையே இல்லை. சூர்யா 42 படத்தின் ரிசல்ட்டுக்கு காரணம் நாங்களாக இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமவுலி தான் அவர் அந்த கதவை திறந்திருக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய மார்க்கெட் இருப்பதே நமக்கு தெரியாமல் இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com