search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எவ்வளவு கெஞ்சியும் ஹன்சிகா காலை தடவ விடவே இல்லை.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு
    X

    எவ்வளவு கெஞ்சியும் ஹன்சிகா காலை தடவ விடவே இல்லை.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு

    • இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
    • இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.


    இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசினார். அதில், "ஹன்சிகா மெழுகு பொம்மை தான். மைதா மாவை பிசைந்து சுவரில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அது மாதிரி தான். படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவர் காலை நான் தடவ வேண்டும். அந்த காட்சிக்கு நானும் இயக்குனரும் ஒப்புக் கொள்ள கேட்டு ஹன்சிகாவிடம் போராடினோம் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு ஜாலியான படம் எல்லோரும் பாருங்கள்" என்று பேசினார்.

    இதற்கு பத்திரிகையாளர் ஒருவர், "ரோபோ சங்கர் மேடையில் இருக்கும்போதே இதை நான் கேட்டிருக்க வேண்டும். ஒரு சபை நாகரிகம் இல்லாதவர்களை மேடையில் ஏறவிடாதீர்கள். மேடையில் ஹன்சிகா ஒரே ஒரு பெண்மணி தான் இருக்கிறார். ரோபோ சங்கர் எல்லை மீறி பேசியிருக்கிறார். இந்த மாதிரியான ஆட்களை மேடையில் ஏற்றாதீர்கள். இன்று ஹன்சிகா மேடையில் சிரித்துக் கொண்டிருக்க மாதிரி இருக்கும் நாளை வேறொரு நடிகர் உட்காரும் போது காலை தொட்டு பார்க்க வேண்டும் என்று பேசுவது நீங்கள் செவித்திற்குள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். சமூக வலைதளத்தில் நடிகையை பற்றி இழிவாக பேச இது வழிவகுக்கும்" என்று பேசினார். இந்த பேச்சிற்காக படக்குழு மன்னிப்பு கேட்டனர்.

    Next Story
    ×