நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை.. தயாரிப்பாளர் கே.ராஜன் ஆதங்கம்

நாட் ரீச்சபிள் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துக் கொண்டார்.
கே.ராஜன்
கே.ராஜன்
Published on

இயக்குனர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள். கிராக்பிரைன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துக் கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை.

கே.ராஜன்
கே.ராஜன்

கே.ராஜன்

பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள் இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன் நன்றி என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com