கோலாகலமாக துவங்கிய கலைஞர் 100 - திரைத்துறையினர் திரளாக பங்கேற்பு

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுகிறது.அரசியல் தலைவர்களும் கலைஞர் 100 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
கோலாகலமாக துவங்கிய கலைஞர் 100 - திரைத்துறையினர் திரளாக பங்கேற்பு
Published on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில், "கலைஞர் 100" என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் 24-ம் தேதி கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், புயல் மற்றும் கனமழை காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 6) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோலாகலமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நடிகர்களை பொருத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ், அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாஸ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும், ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜாவும் கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கலைஞர் 100 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com