search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கண்ணீர் மல்க விடைகொடுத்த உறவுகள்.. மனோபாலாவின் உடல் தகனம்
    X

    கண்ணீர் மல்க விடைகொடுத்த உறவுகள்.. மனோபாலாவின் உடல் தகனம்

    • மனோபாலா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
    • சென்னை வளசரவாக்கத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.




    இவரது மறைவுக்கு திரைபிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் நேரிலும் சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மின்மயானத்தை சென்றடைந்தது.




    அங்கு அவரின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இறுதி சடங்குகளை அவரது மகன் செய்தார். அங்கு கூடியிருந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மனோபாலாவின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க விடைகொடுத்தனர்.

    Next Story
    ×