search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன் - படத்தின் தாமதம் குறித்து பார்த்திபன் பதிவு
    X

    பார்த்திபன்

    மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன் - படத்தின் தாமதம் குறித்து பார்த்திபன் பதிவு

    • பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
    • இப்படம் தமிழக முதல்வர் உள்பட பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இரவின் நிழல்

    'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துனர்.

    பார்த்திபன்

    இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்க நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன், but some technical issues it's taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம். மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது. நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் ஒடிடி-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு, ஓடிடியில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×