இயக்குனர் மிஷ்கின் பெயரை காப்பாற்றுவார்.. கே. பாக்யராஜ் கருத்து

இயக்குனர் ஜேபி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’பிபி 180’. இந்த படத்தின் தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பாக்யராஜ்
பாக்யராஜ்
Published on

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஜேபி எழுதி, இயக்கும் திரைப்படம் 'பிபி 180'. தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அதுல் இந்தியா மூவிஸ் (ATUL INDIA MOVIES) தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். திரில்லர் ஜானரில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியதாவது, தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குனர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார். இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது.

கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜேபி. படம் மிகச் சிறப்பாக வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்று கூறினார்.

மேலும், இயக்குனர் ஜேபி பேசியதாவது, இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் "அஞ்சாதே" படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com