பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

பலராலும் அதிகம் பார்க்கப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட்
Published on

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். 

பிக்பாஸ் அல்டிமேட்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். அதன்படி சினேகன், ஜூலி, சுஜா வருணியும், ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தியும், நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இதே நடைமுறையை தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பின்பற்றப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் சுஜா வருணி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com