search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரூ.200 கோடி மோசடி வழக்கு: ஜாக்குலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகை..
    X

    ஜாக்குலின் - நோரா பதேகி

    ரூ.200 கோடி மோசடி வழக்கு: ஜாக்குலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகை..

    • இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார். மோசடி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீனும் பெற்றார். அந்த ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து பிரபல இந்தி நடிகை நோரா பதேகியும் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் மீது நோரா பதேகி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.


    நோரா பதேகி

    அவர் தாக்கல் செய்த மனுவில், ''என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு சதிசெய்து இந்த வழக்கில் என்னை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்க வைத்து உள்ளார். என்னுடன் நேரடியாக மோத முடியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். மாடலிங் துறையிலும், சினிமாவிலும் எனது வளர்ச்சி பிடிக்காமல் பொய் வழக்கு போட்டு உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×