search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன்.. சின்னத்திரை நடிகை திவ்யா உருக்கம்..
    X

    திவ்யா

    திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன்.. சின்னத்திரை நடிகை திவ்யா உருக்கம்..

    • அர்னவ் விசாரணைக்கு ஆஜராக போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.
    • படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டார்.

    தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


    அர்னவ் - திவ்யா

    இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.


    அர்னவ் - திவ்யா

    ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


    அர்னவ் - திவ்யா

    சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை வரும் 28-ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


    திவ்யா

    இந்நிலையில், நடிகை திவ்யா அளித்துள்ள பேட்டியில், "அர்னவ் திருந்தி வந்தால் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் அதை அர்னவின் பெற்றோர் வந்து கூற வேண்டும். ஏனென்றால் அவர் பெற்றோர் பெயரை சொல்லி தான் என்னை தவிர்த்தார். அவர் என்னுடன் வாழ்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது அது மாதிரி வீட்டில் நடந்து கொள்ள வேண்டும். அவர் வீட்டில் ஒரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியும் இருக்கிறார். அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. எல்லாம் பொய்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×