search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மகிழ்ச்சியை கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை - பார்த்திபன் வருத்தம்
    X

    பார்த்திபன்

    மகிழ்ச்சியை கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை - பார்த்திபன் வருத்தம்

    • பார்த்திபன் இயக்கத்தில் 'இரவின் நிழல்' திரைப்படம் அண்மையில் வெளியானது.
    • நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இரவின் நிழல்

    'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்தார். ஆனால் வெளியாகவில்லை. இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி" என்று பதிவிட்டிருந்தார்.


    இரவின் நிழல் போஸ்டர்

    இந்நிலையில் 'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல்! ப்ளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    Next Story
    ×