search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கார் விபத்து வழக்கு - செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்
    X

    யாஷிகா ஆனந்த்

    கார் விபத்து வழக்கு - செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

    • நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
    • இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்.

    நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


    யாஷிகா ஆனந்த்


    இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.


    யாஷிகா ஆனந்த்


    தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.


    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்


    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் வருகிற ஜூலை 27ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×