search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை.. வனிதா விஜயகுமார் பதிவு
    X

    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை.. வனிதா விஜயகுமார் பதிவு

    • வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
    • பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் அக்காவும் ஆவார்.


    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். தன்னை முறையாக விவாகரத்து செய்துக் கொள்ளாமல் வனிதாவை, பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதாக கூறி பீட்டர் பாலின் மனைவி புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சில நாட்களிலே வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் உடல்நலகுறைவால் காலமானார். இவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வனிதாவின் 3-வது கணவர் என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டனர்.


    வனிதா விஜயகுமார் பதிவு

    இந்நிலையில் வனிதா விஜயகுமார், நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை என்றும் நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, நீண்ட யோசனைகளுக்கு பிறகு ஊடகங்கள், மீடியாக்கள் மற்றும் நியூஸ் சேனல்களுக்கு சில விஷயங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.


    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. நாங்கள் 2020ஆம் ஆண்டு இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம், அதே ஆண்டு எங்கள் உறவு முடிவுக்கு வந்துவிட்டது. நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை. பீட்டர் எனது கணவர் என்று குறிப்பிடுவதை நிறுத்துங்கள். நான் எனது வாழ்க்கையை இப்போதுதான் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் வாழ்ந்து வருகிறேன். இதுபோன்ற செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இது என்னுடைய பணிவான வேண்டுகோள் என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×