ஐதராபாத்தில் சன்னி லியோன் நிகழ்ச்சி திடீர் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்

சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர்.
ஐதராபாத்தில் சன்னி லியோன் நிகழ்ச்சி திடீர் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்
Published on

ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடிகை சன்னி லியோனின் நேரடி டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தனர். ரசிகர்கள் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை வாங்கினர்.

ஆனால், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரித்தனர். மறுப்பு இருந்தாலும், பிரச்சனை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்து சன்னி லியோனை ஐதராபாத் வரவழைத்தனர்.

டிக்கெட் வாங்கியவர்களும் அங்கு குவிந்தனர். ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்டதை வீடியோ செய்தி மூலம் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com