ஆந்திராவில் நடிகர் ஸ்ரீ தேஜ் மீது கற்பழிப்பு, மோசடி வழக்கு

ஒரு ஆண்டாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.நடிகையிடம் நகை பணங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் நடிகர் ஸ்ரீ தேஜ் மீது கற்பழிப்பு, மோசடி வழக்கு
Published on

திருப்பதி:

தெலுங்கு சினிமா நடிகர் ஸ்ரீதேஜ் (வயது 38). இவர் பல்வேறு படங்களில் துணை நடிகர் மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடன் நடித்து வந்த 37 வயதுடைய துணை நடிகையுடன் ஸ்ரீதேஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு ஆண்டாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

அப்போது துணை நடிகையிடம் நகை பணங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடிகையுடன் பேசுவது, பழகுவதை ஸ்ரீ தேஜ் தவிர்த்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி புறக்கணிப்பதை அறிந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். மீண்டும் நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேஜ் மீது கற்பழிப்பு மற்றும் மோசடி குறித்து போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ஸ்ரீதேஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com