சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது - கரு பழனியப்பன்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை.இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது - கரு பழனியப்பன்
Published on

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இப்படத்தில் ஏகன் , யோகி பாபு மற்றும் பிரிகிடா சகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான கரு பழனியப்பன் இப்படத்தை குறித்து முகநூல் பக்கத்தில் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர்

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு.... கடந்த ஒரு மாத காலமாய் கண்டவிடத்தில் எல்லாம் அண்ணே கோழி பண்ணை செல்லதுரை படம் பாக்கலையா? பாத்துட்டு, நாலு வரி நல்லதா, முகநூலில் எழுதுங்க"என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள்.

கல்லூரி காலம் முதலிலேயே நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும் இதுவரை கடிதம் எழுதிக் கொண்டதில்லை. இதுவே முதல் கடிதம். உங்களுடைய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அரங்க வெளியீட்டின் போது வெற்றி பெறவில்லை எனினும் ஓ டி டி தளங்களில் வெளியான பின் பலரும் தங்களை பாராட்டுகின்றனர் அதை தாங்களும் தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர். நிற்க உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே ஆனால் கோழிப்பண்ணை செல்லதுரை போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது. அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக் கொள்வது நம் பயணத்தை தடை செய்யக்கூடும்.

சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தைப்பாராட்டுகளில் குதூகலித்து தேங்கி நின்று விடாதீர்கள். நடிப்பின் அசுரன் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா தங்களுக்கு எழுதிய பாராட்டை பகிர்ந்து இருந்தீர்கள்.

நல்லது. மகிழ்ச்சி. தனக்கு அடுத்த தலைமுறை இயக்குனர்களின் மேல் திரு கஸ்தூரிராஜா காட்டும் அன்பு அது. இதனால் என்ன நன்மை விளையும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். முகம் தெரியாத ரசிகன் நம் படைப்பை ஆரவாரித்து கொண்டாடி வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிகழும் போது முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மோடு கைகோர்த்து அடுத்த படம் செய்ய வருவார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே "தென்மேற்கு பருவக்காற்று" "தர்ம துரை" படங்களுக்கு மேலாக சிறந்த படைப்பையும் மேலான வெற்றியையும் உங்களது அடுத்த படம் அடையட்டும். எதிர்பார்த்து காத்திருக்கும் கரு பழனியப்பன்.

என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com