மீண்டும் நாயகனாக சமுத்திரக்கனி

அருண்விஜய் நடிப்பில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார்.இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார்.
மீண்டும் நாயகனாக சமுத்திரக்கனி
Published on

தமிழில் நாடோடிகள் படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி தொடர்ந்து பல படங்களை டைரக்டு செய்தார். பின்னர் நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் பாலா இயக்கி அருண்விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது புதிய படமொன்றில் சமுத்திரக்கனி மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையை சேர்ந்த நடிகை மிச்சலா, யோகிபாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார். கலா தியேட்டர்ஸ் சார்பில் ராசய்யா கண்ணன் தயாரிக்க, விஜி வசனம் எழுதுகிறார். படத்துக்கு 'பைலா' என்று பெயர் வைத்துள்ளனர். சனுகா இசையமைக்க ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com