search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினிமா வாய்ப்பு கிடைத்தது குறித்து மனம் திறந்த பிருத்விராஜ்
    X

    சினிமா வாய்ப்பு கிடைத்தது குறித்து மனம் திறந்த பிருத்விராஜ்

    • "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது
    • என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன்

    மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.

    இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.

    அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் பற்றி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இதில்கலந்து கொண்டு நடிகர் பிருத்விராஜ் கூறியதாவது :-




    "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை (நடிகர் சுகுமாரன்) பிரபல நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் பட வாய்ப்பு உடனடியாக கிடைத்தது. என்னை விட சிறந்த நடிகர்கள் பலர் இருந்தும் எனக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு தந்தையால் தான் கிடைத்தது.

    என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன். சினிமா குடும்பத்தில் பிறந்ததால் தான எனக்கும் வாய்ப்பு வந்தது.நான் அதிர்ஷ்டசாலியா? ஆமாம், அதிர்ஷ்டசாலி தான். எனது தந்தையால் தான் வாய்ப்பு கிடைத்ததா? ஆமாம், அவரால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை என்னால் மறுக்க முடியாது".என்றார்.

    பிருதிவிராஜின் வெளிப்படையான பேச்சு குறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×