நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என கூறப்படுகிறது.
நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா
Published on

விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்றுள்ள படம் மகாராஜா. இந்த படம் விஜய் சேதுபதிக்கு 50-வது படம். படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வகையில் அமைந்து ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றது.

மகாராஜா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நித்திலன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அவரிடம் நித்திலன் கதை சொல்லி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமீபகாலமாக நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த படத்தின் கதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com