விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை அழிக்காதீர்கள்- தேசிங்கு ராஜா 2 பட விழாவில் நடிகர் புகழ் பேச்சு

10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை அழிக்காதீர்கள்- தேசிங்கு ராஜா 2 பட விழாவில் நடிகர் புகழ் பேச்சு
Published on

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'.

இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. .

இந்நிலையில், 'தேசிங்கு ராஜா 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் புகழ், "வருமானத்துக்காக விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை அழிக்காதீர்கள். ஒரு படத்தை எடுக்க அவ்வளவு கஷ்டப்படுகிறோம். நடிப்பு நன்றாக இல்லை என்று மக்கள் சொன்னால், நிச்சயம் எங்களை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com