இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தின் ஹீரோ விஜய்

படத்தின் கதை, மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தின் ஹீரோ விஜய்
Published on

கிராமத்து பின்னணியில் கதைகளை உருவாக்கி சினிமா எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கும் அடுத்த புதிய படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் இதன் படப்படிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

'குட்டிப்புலி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. கொம்பன், மருது, கொடி வீரன், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். கிராமத்து பின்னணி கதையில் சினிமா படம் எடுத்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக  அறிமுகப்படுத்துகிறார். இதற்கான பட பூஜை விழா நடந்து உள்ளது. இந்த படத்தின் கதை, மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது. தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் ஹீரோயின்களாக  நடிக்கின்றனர். பல புதுமுக நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. படத்தில் மிக முக்கிய சண்டைக்காட்சியை ஒருவாரம் படமாக்க உள்ளனர். இதற்காக பெரிய பொருட்செலவில் செட் உருவாக்கி உள்ளனர்.

இந்தப் படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com