சிம்பு கொடுத்த பிரியாணி விருந்து

படக்குழுவினருக்கு சிம்பு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிம்பு கொடுத்த பிரியாணி விருந்து
Published on

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர்.48 என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக்லைப்' படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோர் தக்லைப் படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர் ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பிறந்தநாளையொட்டி படக்குழுவினருக்கு சிம்பு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com