முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை... ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை... ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
Published on

சென்னை:

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.

இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com